Monday, December 14, 2009

சிப்பாய் புரட்சி பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் எந்தவித யோசனையும் செய்யாமல் துணிந்து வாங்கலாம் இந்த புத்தகத்தை. ஒவ்வொரு பக்கத்திலும் பிரச்சனையை அடிப்படையாகக்கொண்ட இந்த புத்தகத்தை குழப்பம் இல்லாமல் எழுதிய ஆசிரியர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவரே.

அவனுக்கென்ன ராஜ வாழ்க்கை என்று நாம் பேசிக்கொள்வது வழக்கம். உதவித்தொகை வாங்கி பிழைப்பு நடத்தும் இந்த காலத்து முதியவர்கள் போல அந்த காலத்து ராஜாக்கள் ஆங்கிலேயரிடம் இந்த மாதம் இவ்வளவு தொகை எங்களுக்கு கொடுத்தால் பரவாயில்லை என கெஞ்சி கேட்டு பிழைப்பு நடத்தியதை இந்த புத்தகத்தில் படித்த பிறகு ராஜ வாழ்க்கையின் உண்மை நிலை புரிகிறது.

சில நிறுவனங்களில் பணியாளர்களிடம் அனைத்து பொருப்புகளையும் கொடுத்துவிட்டு, பணம் எவ்வளவு வருகிறது என்பதில் மட்டுமே முதலாளிகள் கவணம் செலுத்திக்கொண்டிருப்பார்கள். சில வருடங்கள் கழித்து அந்த பணியாளன் யோசித்துப்பார்ப்பான். நான் தான் வேலை செய்கிறேன், எனக்குதான் அனைத்து விசயங்களும் தெரிகிறது, பணம் மட்டும் முதலாளிக்கு போகிறது! இந்த தொழிலை ஏன் நான் தனியாக செய்யக்கூடாது என்று யோசித்து அந்த முதலாளியிடமிருந்து விலகிச்சென்றுவிடுவான். அதற்குப்பிறகு அந்த முதலாளி தன்னுடைய ஊழியன் இப்படி துரோம் செய்துவிட்டானே என புலம்பத்தொடங்குவார். அப்படித்தான் நடந்துள்ளது ஆங்கியேலர் நம் மண்ணை ஆக்கிரமித்தது. ஆங்கிலேயர்கள் நம் மண்ணில் அத்துமீறி ஆதிக்கம் செலுத்தியதாக மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கும் நாம் அப்போதிருந்த சூழ்நிலையைப்பற்றி பேசுவதில்லை. நாம் பேசாமல் விட்ட அந்த விசயத்தை இந்த புத்தகம் பேசுகிறது. வாகணத்தை பூட்டாமல் சாலையோரம் நிருத்திவிட்டு காணாமல் போய்விட்டதென்று சிலர் பொருப்பில்லாமல் புலம்புவார்களே அவர்களைப்போல்தான் நம் நாட்டைச்சார்ந்த மன்னர்கள் செயல்பட்டுள்ளார்கள். வரும் மாணியத்தை வாங்கிக்கொண்டு சோம்பேரித்தனமாக எந்த வேலையிலும் ஆர்வம் செலுத்தாமல் சுக வாழ்க்கையில் மட்டுமெ கவணம் செலுத்தியுள்ளார்கள் நம் மன்னர்கள். பாதுகாப்பு வேண்டுமா ஆங்கிலேயனை கூப்பிடு, அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டுமா வரி வசூல் செய்துகொள்ளச்சொல் என்பதையே வழக்கமாக கொண்டிருந்தவர்களிடம் யாராக இருந்தாலும் அத்துமீறியிருப்பார்கள் என்பதுதான் உண்மை.

சுதந்திரத்திற்கான போராட்டம் என்பது, வரலாறு புத்தகத்தில் படித்த ஒருசிலரின் வாழ்க்கையோடு முடிந்துவிடுவதில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு புத்தகத்தையும் வழிநடத்திச்செல்ல புத்தகத்தில் யாராவது ஒருவர் முன்னிலை படுத்தப்படுவது வழக்கம். இந்த புத்தகத்தில் அப்படியாரும் இல்லை. இது மங்கள்பாண்டே பற்றியா புத்தகமா! என ஆச்சரியத்துடன் படித்தால் அவரது சாகாப்தம் இரண்டு மூன்று பக்கங்களோடு முற்றுப்பெருகிறது. ஒரு வேலை ஜான்சி ராணி பற்றிய புத்தகமாக இருக்குமோ! என நினைத்தால் அவரும் அப்படியே. வேறு யார்தான் புத்தகத்தில் முன்னிலை படுத்தப்பட்டிருக்கிறார்க்ள்????? புரட்சி. ஆம் புரட்சிதான் இந்த புத்தகத்தை வழிநடத்துகிறது. முதல் பக்கத்திலிருந்து இறுதி பக்கம் வரை போராளிகள் வருகிறார்கள் போகிறார்கள் ஆனால் அவர்களின் மூலமாக புரட்சி மட்டும் ஏந்திய தீபமாக கொண்டு செல்லப்படுகிறது.

கட்டபொம்மன், புலித்தேவன் போன்றோர்கள் வெள்ளையர்களுடன் மோதியது அவர்களது சொந்தப்பிரச்சனைதானே அதெப்படி சுதந்திரப்போராகும் என்று சுதந்திரம் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் எனக்கு ஒரு சந்தேகம் தோண்றும். அந்த விசயத்தை ஆசிரியர் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு அவற்றை ஏன் சுதந்திரப்போராக எடுத்துக்கொள்கிறோம் என்பதையும் விளக்கியுள்ளது சிறப்பு.

திருவாளர் பாம்பு அவர்களே என்று மரியாதையாக அழைத்தாலும் பாம்பு நம்மை கடிக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி அந்த காலத்து ராஜாக்கள் அறிந்திருக்கவில்லைபோலும். அநியாயத்திற்கு விசுவாசமாக இருந்துள்ளார்கள். ஒரு புறம் நீங்கள் நல்ல சாப்பாடு சாப்பிடுங்கள் எங்களுக்கு கஞ்சி போதும் என சிப்பாய்களாக இருந்த நம் மக்கள் கூறுகிறார்கள் என்றால் மறுபுறம் தான் சேமித்த பணத்தை ஆங்கிலேயருக்கே கொடுத்து உதவியிருக்கிறார் ஒரு ராஜா. அளவுக்கு மீறிய விசுவாசம், மரியாதை செலுத்த காரணம் என்ன? சிறு சிறு நாடுகள் ஒன்றின் மீது மற்றொன்றுக்கு பொறாமை, போட்டி, ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் முயற்சி ஆகியவற்றிற்கு ஆங்கிலேயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் முடிவு இரண்டு கரடிகளுகு பிரச்சனையை தீர்த்துவைக்க வந்த குரங்கு கதைபோல் ஆகிவிட்டது.

ஆங்கிலேயர், இந்தியர் என்ற சமாச்சாரங்களையெல்லாம் தாண்டி ஒருவர் நம்மை கவர்கிறார். அவர் கிளைவ். இரண்டு முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டு பிறகு போரிலாவது தன் உயிர் போகட்டும் என ரானுவத்தில் சேர்ந்தவராம்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை தொழில் நுட்பத்துறை பிரபலமாக இருந்ததில்லையா அதுபோல அந்த காலத்தில் ஆங்கிலேயரின் ரானுவத்தில் பணியாற்றுவது மிகவும் விரும்பத்தக்க ஒரு தொழிலாகவும், பிரபலமான ஒரு தொழிலாகவும் கருதப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. தகப்பன் மகன் பேரன் என ஆங்கிலப்படையில் பணியாற்றுவதை சந்தோஷமாக கருதியிருக்கிறார்கள். வரலாற்றில் ஒரு அழிவு ஏற்படுகிறது என்றாலே பெரும்பாலும் அங்கே ஒரு பெண் கதாபாத்திரம் இருக்கும். இங்கேயும் இருக்கிறார்கள். ஆங்கிலேயரின் மனைவிமார்கள் வடிவில். ஆசையாக பணிக்கு சென்ற நம்மவர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் முதல் பிரிவு ஏற்பட காரணமாக அமைந்திருக்கிறார்கள் ஆங்கிலேயரின் மனைவிகள்.

நம் நாட்டில் தற்போது நடக்கும் சில பிரச்சனைகள் படிக்கும் போது பயங்கரமாக இருக்கும். ஆந்திராவில் பிரச்சனை தமிழகத்தில் பிரச்சனை என படிக்கும்போது பெரிய பிரச்சனையாக தெரிகிறது. ஆனால் இந்த புத்தகத்தை படித்த பிறகு, அட இவ்வளவு காலம் நாம் ஒற்றுமையாக இருக்கிறோமே என்ற ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது. இந்து முஸ்லீம் பிரச்சனை, சீக்கியர் முஸ்லீம் பிரச்சனை என ஒருவருக்கொருவர் விரோதித்துக்கொண்டிருந்ததை படிக்கும்போது. இப்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றே தாராளமாக கருதலாம்.

புரட்சியில் நிகழ்ந்த வன்முறைக்காட்சிகளை ஆங்கிலப்படத்தில் பார்ப்பதுபோல அப்படியே விவரித்துள்ளார் ஆசிரியர். ஒரு வீட்டுக்குள் வைத்து கசாப்புக்காரர்களால் பெண்கள், குழந்தைகள் வெட்டி சாய்ப்பதாகட்டும், ஆங்கிலேயர்களை படகில் ஏற்றி வழியனுப்பிவிட்டு தப்பித்த ஒரு சிலரை தவிர அத்தனை பேரையும் அழித்து ஆற்றின் நிறத்தையே மாற்றியதாகட்டும், ஒவ்வொரு நிகழ்வுகளும் நம் கண்முன் நிருத்துகிறார் ஆசிரியர்.

காந்தியம் என்பது வறட்டு சித்தாந்தமில்லை என தமிழருவி மணியன் ஒரு கட்டுரையில் கூறியிருந்தார். அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை, இந்த புத்தகத்தை படித்ததும் புரிகிறது. ஒரு புரட்சியாளர், அவர் உருவாக்கிய படை, தேவையான ஆயுதங்கள் அவ்வளவுதான். ஒவ்வொருவரும் இதைக்கொண்டே போராடுகிறார்கள். ஒவ்வொரு போராட்டம் முடிந்ததும் ஒரு கேள்வி மிச்சமிருக்கிறது அனைவரிடமும் “அடுத்து என்ன செய்ய வேண்டும்” அது யாருக்கும் தெரியவில்லை. ஆட்களும் ஆயுதங்களும் போதும் என நினைத்ததால் ஒரு நூற்றாண்டு காலம் நாம் காத்திருக்க வேண்டியிருந்தது. அஹிம்சை என்றொரு காந்திய சிந்தனை தோண்றாமல் மீண்டும் புரட்சியாளர்கள், ஆயுதம் என நம் சிந்தனை சென்றிருந்தால் இன்னும் ஓர் நூற்றாண்டு நாம் காத்திருக்க வேண்டியிருந்திருக்கும். நல்ல வேலை நம் ஆயுதம் அஹிம்சையாக மாறியது. சிறப்பான இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் செல்ல வேண்டிய இடம் URL: http://nhm.in/shop/978-81-8493-116-7.html


No comments: